இலக்குவன் 'அது மாயமான்' எனல் 3287. | ஆண்டு, அங்கு, இளையான் உரையாடினனால், 'வேண்டும் எனலாம் விழைவு அன்று இது' எனா; 'பூண் துஞ்சு பொலங் கொடியோய்! அது நாம காண்டும்' எனும் வள்ளல் கருத்து உணர்வான். |
வேண்டும் எனலாம் - சீதை விரும்பிக் கேட்கின்ற தன்மையினால்; விழைவு அன்று இது - பொருத்தமான ஆசை அன்று இது; எனா! - என்று கூறாது; 'பூண் துஞ்சு பொலங் கொடியோய் - அணிகலன்கள் அழகுடன் பொருந்தும் பொற்கொடி போன்றவளே!; அது நாம் காண்டும் - அந்த மானைக் காணலாம்; எனும் வள்ளல் கருத்து உணர்வான் - என்று கூறும் இராமனுடைய சிந்தனைப் போக்கை உணர்ந்தவனாய்; இளையான் - தம்பியாகிய இலக்குவன்; ஆண்டு அங்கு உரையாடினன் - அப்போது அவ்விடத்துத் தன் கருத்தை உரைக்கலானான். ஆல் - அசை. கேட்டதைக் கொடுப்பவன் என்பதால் வள்ளல் என்றார். உரிய சமயத்தில் இலக்குவன் குறுக்கிட்டான். 51 |