3288.'காயம், கனகம்; மணி,
     கால், செவி, வால்;
பாயும் உருவோடு இது
     பண்பு அலவால்;
மாயம் எனல் அன்றி,
     மனக் கொளவே
ஏயும்? இறை மெய் அல'
     என்ற அளவே.

    'காயம் கனகம் - (அம்மானின்) உடல் பொன்னிறமாய் உள்ளது;
கால் செவி வால் மணி - காலும், காதும், வாலும் மாணிக்க மயமாய்
உள்ளன; பாயும் உருவோடு இது - வேகமாகப் பாய்ந்தோடும் வடிவோடு
கூடிய இம்மான்; பண்பு அல - இயற்கைப் பண்போடு கூடியதன்று; மாயம்
எனல் அன்றி -
இது ஒருவகை மாயை என்று கருதுதலே அல்லாமல்;
மனக் கொளவே ஏயும் - வேறு விதமாகக் கருதுதல் பொருந்துமோ?;
இறை - என் தலைவனே; மெய் அல - எவ்வகையிலும் இது
உண்மையானது அன்று; என்ற அளவே - என இலக்குவன் கூறும்
அளவில்....

     (அடுத்த செய்யுளில் பொருள் முடிவுறும்).                    52