3295. | 'வரி சிலை மறை வலோனே! மான் இதன் வடிவை, உற்ற அரிவையர், மைந்தர், யாரே ஆதரம் கூர்கிலாதார்? உருகிய மனத்த ஆகி, ஊர்வன, பறப்ப, யாவும் விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய்!' |
'வரிசிலை மறை வலோனே - கட்டமைந்த வில்லின்கலையாகிய வேதத்தில் வல்லவனே!; மான் இதன் வடிவை - இம்மானின் உருவத்தை; உற்ற - நெருங்கிக் கண்ட; அரிவையர் மைந்தர்- பெண்களானாலும் ஆண்களானாலும்; யாரே ஆதரம்கூர்கிலாதார்? - (இதனிடம்) ஆசை கொள்ளாதவர் யாராவது இருக்கமுடியுமா?; உருகிய மனத்த ஆகி - உள்ளம் கரைந்துருகுவனவாகி;ஊர்வன, பறப்ப யாவும் - ஊர்ந்தும் பறந்தும் செல்லும் அனைத்துவிலங்குகளும் பறவைகளும்; விரிசுடர் விளக்கம் கண்ட - எரியும்நெருப்புச் சுடரின் வெளிச்சம் பார்த்து; விட்டிலின் வீழ்வ - விழும்விட்டில் பூச்சிகளைப் போல் விரும்பி அம் மானைச் சூழ்வதை;காணாய் - நீ பாராய் (என்றான் இராமன்) உயிரினங்கள் அனைத்தும், ஆண் பெண் ஆன மானுடரும் இம் மானைக் கண்டு மயங்குவதால் சீதையின் மயக்கத்தில் வியப்பில்லைஎன இராமன் இலக்குவனுக்கு அமைதி காட்டுகின்றான். 59 |