3313. | நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப் பட்டது; அப்பொழுதே, பகு வாயினால், அட்ட திக்கினும், அப்புறமும் புக விட்டு அழைத்து, ஒரு குன்று என வீழ்ந்தனன். |
நெட்டிலைச் சரம் - நெடிய இலை வடிவம் கொண்ட அவ்வம்பு; வஞ்சனை நெஞ்சுறப் பட்டது - வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது; அப்பொழுதே - அந்தக் கணமே; பகு வாயினால் - பிளவுபட்ட வாயினால்; அட்டதிக்கினும் - எட்டுத் திசைகளிலும்; அப்புறமும் புக - அதற்கு அப்பாலும் செல்லும்படி; விட்டு அழைத்து - (சீதா லட்சுமணா) என்று இராமன் குரலில் கூவி; ஒரு குன்று என வீழ்ந்தனன் - மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம் கொண்டு) வீழ்ந்தான். தன் குரலை இராமன் குரலாக மாற்றி அழைத்து மடிந்தான்.மடியும் போதும் வஞ்சனையால் 'சீதா லட்சுமணா' என்று குரல்கொடுத்தான். 77 |