3317.'மாற்றம் இன்னது, "மாய
     மாரீசன்" என்று,
ஏற்ற காலையின் முன்
     உணர்ந்தான் எனது
ஆற்றல் தேரும்
     அறிவினன்; ஆதலால்,
தேற்றுமால் இளையோன்'
     எனத் தேறினான்.

    இளையோன் - தம்பி இலக்குவன்; ஏற்ற காலையின் - மானை
எதிர் கொண்ட அளவிலே; மாய மாரீசன் என்று முன் உணர்ந்தான்-
மாயை செய்தவன் மாரீசன் என்று முன்னமே அறிந்து சொன்னான்; எனது
ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் -
(இப்போதும்) என்னுடைய
வலிமையை நன்கு தெளிவாக அறிந்திருப்பவனாதலால்; மாற்றம்
இன்னது தேற்றும் -
சீதைக்கு ஆறுதல் கூறி இக்குரலின்
உண்மையை உணர்த்தியிருப்பான்; எனத் தேறினான் - என ஆறுதல்
கொண்டு மனத் தெளிவு கொண்டான்; ஆல் - அசை.

     தம்பியின் அறிவையும், ஆறுதல் தரும் மாட்சியையும் போற்றி
மகிழ்ந்தான்.                                                81