3551. | தன் நினைந்திலள் என்பது சாலுமோ - மின் நினைந்த விலங்கும் எயிற்றினான், "நில் நில்" என்று நெருங்கிய போது அவள் என் நினைந்தனளோ?' என எண்ணுமால். |
மின் நினைந்த விலங்கும் எயிற்றினான் - மின்னலைப் போல இடை விலகியுள்ள பற்களை உடைய இராவணன்; நில் நில் என்று நெருங்கிய போது - நில் நில் என்று கூறிக் கொண்டு நெருங்கிய போது; அவள் தன் நினைந்திலள் என்பது சாலுமோ - அந்தச் சீதை என்னை நினைக்கவில்லை என்று கூறுவது பொருந்துமோ?; என் நினைந்தனளோ - என்னைப் பற்றி என்னென்ன நினைத்தாளோ?; என எண்ணும் - என்று இராமன் எண்ணினான். 'இராவணன் தன்னை நெருங்கிய போது சீதை என்னை நினைக்கவில்லை என எண்ணுவது பொருந்துமோ? அவள் என்னென்ன நினைத்தாளோ' என்று இராமன் எண்ணினான். தன் என்றது ஈண்டு இராமனை; இதைச் சீதையைக் குறிப்பதாகக் கொண்டும் உரை கூறலாம். சாலுதல் - பொருந்துதல், என் நினைத்தனளோ - தன்னைக் காக்க வேண்டிய காலத்துக் காக்க வராமையால் மாரீசனின் மாயக் குரல் கேட்டு முன்னமே மனம் கலங்கி இருந்த சீதை யாது கருதினாளோ என்றபடி. விலங்குதல் - இடைவெளியுடன் அமைதல். நில் நில் - அடுக்கு சினக் குறிப்பினது. ஆல் - ஈற்றசை. 11 |