3606. | 'வரி விற் கை என் ஆர் உயிர் வந்திலனால்; "தரு சொல் கருதேன்; ஒரு தையலை யான் பிரிவுற்றனென்" என்பது ஒர் பீழை பெருத்து எரிவித்திட, ஆவி இழந்தனனோ? |
வரிவிற்கை என் ஆர் உயிர் வந்திலனால் - கட்டமைந்த வில்லைக் கையில் ஏந்திய என் அருமையான உயிர் போன்ற தம்பி வரவில்லை; தருசொல் கருதேன் - (தான் எனக்குச்) சொன்ன சொற்களை எண்ணிக் கருதாமல்; யான் ஒரு தையலை - நான் ஒப்பற்ற பெண்ணாகிய சீதையை; பிரிவுற்றனென் - பிரியப் பெற்றேன்; என்பது ஒர் பீழை - என்ற ஒப்பற்ற பெருந்துன்பம்; பெருத்து எரிவித்திட - மிகுந்து தன்னை வாட்டி வருத்தியதால்; ஆவி இழந்தனனோ - உயிரை விட்டு விட்டானோ. மாயமான் பின் சென்ற போது தான் தடுத்ததைக் கேளாமல் பின் சென்று சீதையைப் பிரிய வேண்டிய நிலைமை வந்ததை எண்ணிக்கலங்கி உயிரை விட்டு விட்டானோ என இராமன் எண்ணினான்.தருசொல் - இலக்குவன் இராமனுக்கு கூறிய சொல், "அடுத்தவும்எண்ணிச் செய்தல், அண்ணலே வன் கூறிய சொல். இதன் விரிவுஇங்குப் பேசப்படுகிறது. (3398). பீழை - துன்பம். உயிர் -உவமையாகுபெயர். 66 |