3613.'மாந்தா முதல்
     மன்னவர்தம் வழியில்,
வேந்து ஆகை துறந்தபின்,
     மெய் உறவோர்
தாம்தாம் ஒழிய,
     தமியேனுடனே
போந்தாய்; எனை
     விட்டனை போயினையோ?'

     மாந்தா முதல் மன்னவர் தம் வழியில் - மாந்தாதா முதலிய
(நம் முன்னோர்களான) அரசர்கள் தம் கால்வழியில்; வேந்து ஆகை
துறந்தபின் -
அரசனாதலை (நான்) துறந்த பிறகு; மெய் உறவோர்
தாம் தாம் ஒழிய -
(என்) உண்மையான உறவினர்கள் யாவரும்
உடன்வராமல் நீங்க; தமியேனுடனே போந்தாய் - தனித்தவனாகிய
என்னுடன் வந்தாய்; எனை விட்டனை போயினையோ - (இப்போது
நீயும்) என்னை விட்டுப் போய் விட்டாயோ?

     மெய் உறவோர் - உள்ளன்புடைய உறவினர். மாந்தா -
மாந்தாதா. மாம்தாதா - மாந்தாதா என ஆயிற்று.                    73