3618. | பேர்ந்தான், நெடு மாயையினில் பிரியா; ஈர்ந்தான், அவள் நாசி பிடித்து, இளையோன்; சோர்ந்தாள் இடு பூசல் செவித் துளையில் சேர்ந்து ஆர்தலுமே, திருமால் தெருளா, |
இளையோன் - இளையவனாகிய இலக்குவன்; நெடுமாயையினில் பேர்ந்தான் - (அயோமுகியின்) மிக்க மோகனை என்ற மாயையில் இருந்து நீங்கினான்; பிரியா - அவ்வாறு நீங்கி; அவள் நாசி பிடித்து ஈர்ந்தான் - அவளது மூக்கைப் பிடித்து அறுத்தான்; சோர்ந்தாள் - (அவ்வாறு உறுப்பு அறுப்பு உண்டதனால்) தளர்ந்தவள் ஆகிய (அந்த அரக்கி); இடுபூசல் - எழுப்பிய பேரொலி; செவித் துளையில் சேர்ந்து ஆர்தலுமே - காதுகளில் பட்டு ஒலித்த உடனே; திருமால் தெருளா - இராமன் (கலக்கம் நீங்கி) மனம் தேறி (எண்பதாம் பாடலில் முடியும்). மோகனை மாயையில் இருந்து நீங்கிய இலக்குவன்,அயோமுகியின் மூக்கைப் பிடித்து அறுத்தான். தன் உறுப்புஅறுப்புண்டதனால் தளர்ந்து அவள் எழுப்பிய பேரொலி இராமனின்காதுகளில் பட்டது. பேர்தல் - நீங்குதல். ஈர்தல் - அறுத்தல், சோர்தல்- தளர்தல், தெருளா - இலக்குவன் தன்னைச் சந்தித்துத் துயர்விளைவித்தவரை வென்று விட்டான் என்று தெளிந்தது. 78 |