3629.'பிரிபவர் யாவரும்
     பிரிக; பேர் இடர்
வருவன யாவையும்
     வருக; வார் கழல்
செரு வலி வீர!
     நின்-தீரும் அல்லது,
பருவரல், என்வயின்
     பயிலற்பாலதோ?

    வார் கழல் - நீண்ட வீரக் கழல் அணிந்த; செரு வலி வீர -போர்
வலி படைத்த வீரனே; பிரிபவர் யாவரும் பிரிக - (என்னைத்தனியே
விட்டுப்) பிரிகின்றவர்கள் எல்லோரும் பிரிந்து செல்க; பேர்இடர் வருவன
யாவையும் வருக -
பெருந்துன்பங்களாகவருகின்றவை எல்லாம் வருக;
நின் தீரும் அல்லது - அவை எல்லாம் உன்னால் நீங்குமேஅல்லாது;
என் வயின் -
என்னிடம்; (இனிமேல்); பருவரல் -துன்பம்; பயிலற்
பாலதோ -
தங்கி வருத்தும் தன்மையதோ? அன்று.

     யார் என்னை விட்டுப் பிரிந்தாலும் எத்துன்பம் நேர்ந்தாலும்அவை
உன்னால் தீர்ந்துவிடும். நீ என்னுடன் இருத்தலால் எவ்வகைத்துன்பமும்
எனக்கு நேராது என்றபடி.

     திண்பொருள் எய்த லாகும்; தெவ்வரைச் செகுக்க லாகும்;
    நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணலாகும்;
    ஒண்பொரு ளாவது, ஐயா, உடன் பிறப்பு ஆக்கலாகா-
    எம்பியை ஈங்குப் பெற்றேன் என் எனக்கு அரியதுஎன்றான்.

    (சீவக சிந்தாமணி. 1760) என்ற பாடலையும் ஒப்பிடலாம்.பருவரல் -
துன்பம். பயிலல் - தொடர்ந்து தங்கி இருத்தல். பேர் இடர்- பண்புத்
தொகை. வருவன - வினையாலணையும் பெயர்.                     89