கவந்தன் கரவலையில் இருவரும்

3647. நால் திசைப் பரவையும்,
     இறுதி நாள் உற,
காற்று இசைத்து எழ எழுந்து,
     உலகம் எங்கணும்
ஏற்று இசைத்து உயர்ந்து
     வந்து இடுங்குகின்றன
போல், திசை சுற்றிய
     கரத்துப் புக்குளார்.

    இறுதி நாள் உற - உலகங்கள் அழியும் ஊழிக்காலம் வந்து
சேர்தலால்; நால் திசைப் பரவையும் - நான்கு திசைகளிலும் உள்ள
எல்லாக் கடல்களும்; உலகம் எங்கணும் - உலகம் முழுவதிலும்;
காற்று இசைத்து எழ எழுந்து - ஊழிக் காற்று முழங்கிப் பரவி;
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றனபோல் - எதிர்த்து
ஆரவாரத்தோடு உயரமாகி வந்து நெருக்குவனபோல; திசை சுற்றிய -
எல்லாத் திசைகளிலும் சுழன்று வருகின்ற; கரத்துப் புக்குளார் -
(கவந்தனின்) கைகளிடையே இராமலக்குவர் புகுந்தனர்.

     ஊழிக் காற்றினால் பொங்கிய எல்லாக் கடல்களும் பரவிச்சுழல்வது
போல வேகமாகக் கவந்தனின் கரங்கள் சுழன்று வளைத்தன;வளைத்த
கரங்களிடையே இருவரும் சிக்கினர். இது பாடலின் கருத்து.நால்திசைப்
பரவையும் - இதன்கண் உள்ள உம்மை நான்குதிசைகளிலும் உள்ள
கடல்கள் யாவற்றையும் உளப்படுத்தலின்முற்றும்மையாகும்.            5