3657. | ஓத நீர், மண், இவை முதல ஓதிய பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே, வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும் பாதகம் திரண்டு, உயிர் படைத்த பண்பினான். |
ஓத நீர் மண் இவை முதல ஓதிய - குளிர்ந்த நீர், மண் முதலாக ஓதப்பட்ட; பூதம் ஓர் ஐந்தினில் - ஐந்து பூதங்களினால்; பொருந்திற்று அன்றி - (இவனது உடல்) அமைந்து பொருந்தியது என்பதல்லாமல்; வேத நூல் வரன்முறை விதிக்கும் - வேத நூல்கள் மரபுகள் வகுத்த; ஐம்பெரும் பாதகம் திரண்டு - ஐந்து பெரும் பாதகங்களே ஓர் உடம்பாக ஒன்று சேர்ந்து; உயிர் படைத்த பண்பினான் - உயிர் பெற்றுவிட்டது போன்ற தன்மை உடையவன். உடம்புகள் ஐந்து பூதச் சேர்க்கையால் உண்டாவன. இது பொதுவிதி. கவந்தனின் உடம்பு, பிற உடம்புகள் போல். ஐம்பூதங்களால்ஆனது அன்று; பஞ்ச மகா பாதகங்கள் ஒன்று திரண்டு கவந்தனின்மேனி ஆயின என்கிறார், கற்பனைவல்ல கம்பர். தற்குறிப்பேற்றஅணி. ஐந்து பூதங்கள்; மண், நீர், அனல், காற்று, வான் ஐந்துபாதகங்கள் கொலை, களவு, காமம், பொய், கள் உண்ணல்; வேறுவகையில் கூறுதலும் உண்டு. 15 |