3675.'தணிக்கும் தன்மைத்து அன்றுஎனின்,
     இன்று இத் தகை வாளால், -
கணிக்கும் தன்மைத்து அன்று,
     விடத்தின் கனல் பூதம் -
பிணிக்கும் கையும், பெய் பில
     வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி;
     துன்பம் துற' என்றான்.

    "விடத்தின் கனல் பூதம் - நஞ்சுபோல் எரிக்கும் இந்தப் பூதம்;
இன்று இத் தகை வாளால் - இன்றைக்கு இந்தத் தகுதிமிக்க
வாளால்; தணிக்கும் தன்மைத்து அன்று எனின் - வெட்டித்
துணிக்கத்தக்கது அன்று என்றால்; கணிக்கும் தன்மைத்து அன்று -
நம்மால் வேறு வகையில் மதிப்பிடத் தக்கதன்று; பிணிக்கும் கையும்
பெய் பில வாயும் -
தன் எல்லைக்குள் உள்ளவற்றையெல்லாம்
கட்டிப்பிடிக்கின்ற கையையும் சிக்கியவற்றையெல்லாம் பெய்கின்ற
குகை போன்ற வாயையும்; பிழையாமல் - குறி தப்பாமல்; துணிக்கும்
வண்ணம் காணுதி -
துண்டாக்கிப் பிளக்கும் தன்மையைக்
காண்பாயாக; துன்பம் துற - துயரத்தை விடுவாயாக; என்றான் -
என்று இலக்குவன் கூறினான்.

     இப் பூதம் நம் வாளால் துணிக்கத்தக்கதே அன்றி வேறுவகையால்
மதிக்கத் தக்கதன்று என்பது கருத்து.                              33