3678. | 'அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை' என்று அழன்றான்; பொழிந்த கோபத்தன்; புதுப்பொறி மயிர்ப்புறம் பொடிப்ப, 'விழுங்குவேன்' என வீங்கலும், விண் உற, வீரர், எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர், இட்டார். |
'அழிந்துளார் அலர் - என்னைக் கண்டும் இவர்கள் தளரவில்லை; இகழ்ந்தனர் என்னை - அஞ்சித் தளராமல் உரமாக நிற்பதால் இவர்கள் என்னை அவமதித்து விட்டனர்'; என்று அழன்றான் - என்று எண்ணிக் கவந்தன் சினம் மூண்டான்; பொழிந்த கோபத்தன் - பொங்கிப் பொழியும் சினம் கொண்டவனாய்; புதுப் பொறி மயிர்ப்புறம் பொடிப்ப - புதிதாய் தோன்றிய சினத் தீப்பொறி, மயிர்க் கால் தொறும் தோன்ற; "விழுங்குவேன்" என வீங்கலும் - 'இவர்களை விழுங்கிடுவேன்' எனக் கிளம்பிய அளவில்; விண் உற எழுந்த தோள்களை - ஆகாயம் அளாவி எழுந்த கவந்தனின் தோள்களை; வீரர் - வீரம் கொண்ட இராமலக்குவர்; வாள்களால் அரிந்தனர் இட்டார் - வாள்களால் வெட்டி வீழ்த்தினார்கள். இயல்பாகவே சினப்பொறி தோன்றுகின்ற தோற்றத்தான்,கவந்தன் : இராமலக்குவர் அவனைக் கண்டும் அஞ்சாது நின்றுஉருத்து நோக்கியதால் புதிதாகச் சினப்பொறி தோன்றியது என்பார்,'புதுப் பொறி' என்றார். 36 |