316.சிவனும் அம்புய மலரில்
      அயனும் இந்திரை கொழுநன்
அவனும் வந்திட உதவும் அரி
      எனும் பிரமம் அது
துவளும் அஞ்சன உருவு
      தொடரு செங்கமல மலர்
உவமை கொண்டு இதில் ஒருவன்
      உலகில் வந்ததுகொல் என.

     அம்புய மலர் - தாமரை மலர்; இந்திரை - திருமகள்; கொழுநன் -
கணவன்.                                                   8-2