326.'நீலகண்டனும், நேமியும்,
      குலிசனும், மலரின்-
மேல் உளானும், வந்து, அவன்
      உயிர்க்கு உதவினும், வீட்டி
ஆலும் உன் அரசு
      உரிமையோடு அளிக்குவென்; அனலோன்
சாலும், இன்று எனது உரைக்கு
      அருஞ்சான்று' எனச் சமைந்தான்.

     நீலகண்டன் - சிவபிரான்; நேமி - திருமால்; குலிசன் - (வச்சிரப்
படையான்)இந்திரன்.                                       71-1