7. வாலி வதைப் படலம்

329.பேர்வுற வலிக்கவும் மிடுக்கு
      இல் பெற்றியார்
நோவுற உலந்தனர்; அதனை
      நோக்கி, யான்
ஆர்கலிதனைக் கடைந்து,
      அமுது கொண்டனென்;
போர் வலி அழிந்து போய்,
      புறம் தந்து ஓடலேன்.

     பேர்வுற - அசைந்திட; வலிக்க - இழுக்க; மிடுக்கு - வலிமை;
ஆர்கலி - கடல்.                                           27-1