331. என்றலும், இராமன், 'நீங்கள்
      இருவரும் எதிர்ந்த போரில்,
ஒன்றிடும் உடலினாலே உருத்தெரிவு
      அரியது ஆகி,
கொன்றிடு பாணம் ஏவக்
      குறித்தலேன்; குறியால் செய்த
மன்றலர் மாலை சூட்டி
      ஏவுதும், மறித்தும்' என்றான்.

                                                   61-2