16.  மயேந்திரப் படலம்

378.புள்ளரசு இன்ன வாய்மை சொல்லி
      விண் போந்த பின்னர்,
தெள்ளிதின் உணர்ந்தார் யாரும்; அங்கு
      அது சாம்பன் சிந்தித்து,
உள்ளவர் தன்னில் வல்லார் யார்
     என உன்னி, யாண்டும்
தள்ளரும் புகழோன் வாயுத்
      தனையனை நோக்கிச் செப்பும்:

     புள்ளரசு - பறவைகளுக்கு அரசனான சம்பாதி; வாயுத் தனையன் -
வாயுவின் மகனாகிய அனுமன்.