3796.'ஆயமால் நாகர்
     தாழ் ஆழியானே அலால்,
காயமான் ஆயினான்
     யாவனே? காவலா!
நீ அம் மான் நேர்தியால்;
     நேர் இல் மாரீசன் ஆம்
மாய மான் ஆயினான்
     மா யமான் ஆயினான்.

     காவலா - அரசே; காயமான் ஆயினான்- மானிட உடம்பில்
தோன்றும் இந்த இராமன்; ஆயமால் நாகர் தாழ் - கூட்டமாகவுள்ள
பெருமை பொருந்திய தேவர்கள் வணங்குகின்ற; ஆழியானே அலால் -
திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்தருளும் திருமாலே அல்லாது;
யாவனே- வேறு யாரவன்? நீ அம்மான் நேர்தி- நீ அப்பெரு
மைக்குரியவனுடன்நட்புக் கொள்வாயாக; நேர்இல் - நிகரில்லாத
வலிமையுடைய; மாரீசன் ஆம்- மாரீசன் என்கின்ற; மாயமான்
ஆயினான் -
மாயமானாய் வந்தஅரக்கனுக்கு; மா யமான் ஆயினான் -
(இந்த இராமன்) பெரிய யமனாகநின்று அழித்தவனாவான்.

     காயம் - உடம்பு; மான் - மனிதன்.  உடம்பால் மனிதனாகத்
தோன்றியவன் என்பதால், தன்மையால் தெய்வம் என்பது பெறப்படும்.
யாவனே - ஏ, எதிர்மறை, வேறு எவனுமாகான்; இராமன் திருமாலே
என்பதை வற்புறுத்த வந்தது. யமான் - யமன் என்பதன் நீட்டல்
விகாரம்.                                                 11