3800.'தந்திருந்தனர்அருள்; தகை
     நெடு்ம் பகைஞன் ஆம்
இந்திரன் சிறுவனுக்கு இறுதி,
     இன்று இசைதரும்;
புந்தியின் பெருமையாய்! போதரு' என்று
     உரை செய்தான் -
மந்திரம் கெழுமு நூல்
     மரபு உணர்ந்து உதவுவான்.

     புந்தியின் பெருமையாய் - அறிவில் மேம்பட்டவனே! அருள் தந்
திருந்தனர் -
(இராமலக்குவர்) நம்மாட்டுக் கருணை வைத்துள்ளனர்; தகை
நெடும் பகைஞன் ஆம் -
(அதனால்) வலிமை மிக்க பகைவனா கிய;
இந்திரன் சிறுவனுக்கு -
இந்திரன் மகன் வாலிக்கு; இறுதி- அழிவு; இன்று
இசைதரும்
- இப்பொழுது நேரிடும்; போதரு - (அதனால் அவர்களோடு
நட்புக் கொள்ளப்) புறப்பட்டு வருவாயாக; என்று - என்று; மந்திரம்
கெழுமுநூல் மரபு
- மன்னர்க்குரிய நீதி நூல்களின் மரபினை; உணர்ந்து
உதவுவான்-
உணர்ந்து சுக்கிரீவனுக்கு ஆலோசனை சொல்பவனாகிய
அனுமன்; உரைசெய்தான் - சொன்னான்.

     வாலியை வெல்ல, இராமன் நட்பைப் பெற்றுக் கொள்வதே தக்கது
என்னும் அறிவு சுக்கிரீவனுக்கு உண்டு என்பது புலப்படப் 'புந்தியின்
பெருமையாய்' என விளித்தான். புந்தி - புத்தி என்பதன் மெலித்தல் விகாரம்;
போதர் - போதருக என்பதன் விகாரம்.  ''போதர் கண்டாய் இங்கே போதர்
கண்டாய்'' (2-9-6) என்ற பெரியாழ்வார் பாசுரம் காண்க. அனுனுன் கூறும்
ஆலோசனை, அரசியல் மரபிற்கேற்ப அமைந்திருக்கும் என்பதை 'மந்திரம்
கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான்' என்று கூறி அனுமனைச்
சிறப்பித்தார்.                                                 15