381. நாலு மறைக்கும் வேலியும்
      ஆகி, நடு நிற்கும்
சீலம் மிகுந்தீர்! திங்கள்
     மிலைச்சித் திகழ் வேணி,
ஆல மிடற்றான்மேலும் உதித்தீர்!
      அது போதில்
காலின் நிறைக்கோ காலனும்
      ஆகக் கடிது உற்றீர்.

     திங்கள் மிலைச்சி - சந்திரன் சூடி; வேணி - சடை;
ஆலமிடற்றான் - நஞ்சினைக் கழுத்திலே கொண்ட சிவபிரான்        18-1