3887.'தென் புலக் கிழவன் ஊர்
     மயிடமோ? திசையின் வாழ்
வன்பு உலக் கரி
     மடிந்தது கொலோ? மகரமீன்
என்பு உலப்புற உலர்ந்தது
     கொலோ? இது எனா,
அன்பு உலப்பு அரிய நீ,
     உரை செய்வாய்' என, அவன்,

     இது - இந்த வறண்ட உடல்; தென்புலக் கிழவன் - தெற்குத்
திசைக்குத் தலைவனான யமன்; ஊர் மயிடமோ - வாகனமாக ஏறிச்
செலுத்துகின்ற எருமைக் கடாவோ?திசையின் வாழ் - திசைகளில் வாழ்கின்ற;
வன்பு உலக் கரி -
வலிைை பொருந்திய கல் போன்ற யானைகளுள் ஒன்று;
மடிந்தது கொலோ -
மடிந்து கிடக்கிறதோ? மகர மீன் - மகரம் என்னும்
பெரிய மீன்; உலப்பு உற - இறந்து படி; என்பு உலர்ந்தது கொலோ -
அதன் எலும்பு உலர்ந்து கிடக்கின்றதோ?எனா - என்று வியந்து; அன்பு
உலப்பரிய நீ
- 'அன்பு குறைவுபடாதவனாகிய நீ; உரை செய்வாய் -
சொல்வாய்; என - என்று (இராமன் கேட்க); அவன் - அந்தச் சுக்கிரீவன். . .

     'அவன்' என்னும் சுட்டுப் பெயர் பதினான்காம் பாடலில் 'உரை
செய்தான்' என்பதனோடு முடியும்.  மகரம் - சுறா எனும் மீன்.  இது
மரக்கலத்தையும் கவிழ்க்க வல்லது.  உலம் திரண்டகல்; கொலோ - கொல்
ஐயப்பொருள் இடைச்சொல். துந்துபியின் எலும்புக் கூட்டைப் பல வகையாய்
ஐயயேமற் கொண்டு கூறியதாதலின் ஐய அணியின் பாற்படும்.          2