3890.'கடிது சென்று, அவனும்,
     அக் கடவுள்தன் கயிலையைக்
கொடிய கொம்பினின் மடுத்து
     எழுதலும், குறுகி, ''முன்
நொடுதி; நின் குறை
     என்?'' என்றலும், நுவன்றனன்அரோ,
''முடிவுஇல் வெஞ்செரு, எனக்கு அருள்
     செய்வான் முயல்க!'' எனா,

     அவனும் கடிது சென்று - அந்த அரக்கனும் விரைந்து சென்று;
அக்கடவுள் தன் கயிலையைக் -
அந்தச் சிவபிரானின் கைலை மலையை;
கொடிய கொம்பினின் -
தன் கொடிய கொம்புகளால்; மடுத்து எழுதலும் -
முட்டிப் பாய்ந்து எழுகையில்; முன் குறுகி - (சிவபிரான்) அவன் எதிரில்
வந்து; நின் குறை என் - ''உனக்கு வேண்டுவது என்ன?நொடிதி -
சொல்வாய்''; என்றலும் - என்று கேட்டதும்; எனக்கு - (துந்துபி) 'எனக்கு;
முடிவுஇல் வெஞ் செரு -
முடிவு இல்லாத கொடிய போரினை; அருள்
செய்வான் முயல்க -
அளிக்க முயல்வாயாக; எனா நுவன்றனன் - என்று
சொன்னான்.

     'என்னோடு இடைவிடாது போர் செய்ய வேண்டும்'.  என்று துந்துபி
தான் வந்த காரணத்தைச் சிவபிரானிடம் அறிவித்தான்.             5