3896. | 'தலையின்மேல் அடி பட, கடிது சாய் நெடிய தாள் உலைய, வாய் முழை திறந்து உதிரஆறு ஒழுக, மா மலையின் மேல் உரும் இடித்தென்ன, வான் மண்ணொடும் குலைய, மா திசைகளும் செவிடுற, - குத்தினான்.* |
தலையின் மேல் அடிபட - தலை மீது அடிபடும் படியும்; கடிது சாய் நெடிய தாள் - விரைவில் விழுந்து நீண்ட கால்கள்; உலைய- ஒடியும் படியும்; முழை வாய் திறந்து - மலைக்குகை போன்ற வாய் திறந்து; உதிர ஆறு ஒழுக - குருதி ஆறு பெருகவும்; மா மலையின் மேல் - பெரிய மலையின் மீது; உரும் இடித்தென்ன- இடி இடித்தாற் போன்று; வான் மண்ணொடும் குலைய - விண்ணுலகமும நிலவுலகமும் நடுங்கவும்; மாதிசைகளும் செவிடுற - பெரிய திசைகள் எல்லாம் செவிடுபடவும்; குத்தினான் - குத்தினான். விண்ணுலகமும் மண்ணுலகமும் நடுங்க, திசைகள் செவிடுபட, அசுரன் கால் ஒடிந்து விழ, வாய்வழியே குருதி பெருக்கெடுத்தோட, மலைமீது இடி விழுந்தாற்போல அவ்வரக்கன் தலைமேல் வாலி குத்தினான் என்பது பொருளாகும். வாலி கொடுத்த குத்தின் வலிமை இதனால் புலப்படும். 11 |