3911.தாங்கினன்இருத்தி, அத்
     துயரம் தாங்கலாது
ஏங்கிய நெஞ்சினன்,
     இரங்கி விம்முவான் -
'வீங்கிய தோளினாய்!
     வினையினேன் உயிர்
வாங்கினென், இவ் அணி
     வருவித்தே' என.

     தாங்கினன் இருத்தி - (அங்ஙனம் சுக்கிரீவன் இராமனைத்) தாங்
கிக்கொண்டு உட்காரவைத்து; அத்துயரம் தாங்கலாது - (அப்பெருமா னுக்கு
ஏற்பட்ட) அத்துன்பத்தைக் கண்டு பொறுக்கமாட்டாமல்; ஏங்கிய நெஞ்சினன்
-
வருந்திய மனத்தினனாய்; வீங்கிய தோளினாய் - (இராமனை நோக்கி)
'பருத்த தோள்களை உடையவனே! வினையினேன் - தீவினையுடையேனாகிய
நான்; இவ் அணி வருவித்தே - இந்த அணிகலன்களை உம்மிடம் கொண்டு
வரச்செய்து; உயிர் வாங்கினென் - உமது உயிரைப் போக்கினேன்'; எனா -
என்ற கூறி; இரங்கி விம்முவான் - இரங்கி விம்மலுற்று வருந்தினான்.

     சீதையின் அணிகலன்களைக் கொணர்ந்து காட்டியமையால்தான் இராமன்
இவ்வளவு துன்பம் அடைந்தான் ஆதலின், அத்துன்பத்திற்குக் காரணமான
தன்னைத் 'தீவினையுடையேன்' எனக் குறிப்பிட்டு வருந்தினான் சுக்கிரீவன்.
தாங்கினன் - முற்றெச்சம்.                                     11