4271. 'நன்றி கொன்று, அரு
      நட்பினை நார் அறுத்து,
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து,
      உரை பொய்த்துளார்க்
கொன்று நீக்குதல்
     குற்றத்தில் தங்குமோ?
சென்று, மற்று அவன்
      சிந்தையைத் தேர்குவாய்.

     நன்றிகொன்று - (இப்படி) ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச்
சிதைந்து; அருநட்பினை நார் அறுத்து - பெறுவதற்கு அருமையான நட்பாம்
அன்புக்கயிறுஅற அழித்து; ஒன்றும் மெய்ம்மை - (எல்லோர்க் கும்)
ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையை; சிதைத்து - குலைத் துவிட்டு;
உரைபொய்த்துளான் -
வாக்குத் தவறியவனை; கொன்று நீக்குதல் -
கொன்று ஒழிப்பது; குற்றத்தின் நீங்கும் ஆல் - பழிபாவங் களிலிருந்து
நீங்கிய செயலேயாகும் (ஆகவே); சென்று அவன் சிந்தையை - நீ அங்கே
சென்று அச்சுக்கிரீவனது மன நிலையை; தேர்குவாய் - ஆராய்ந்து அறிந்து
வருவாய்;

     'நட்பு நாரற்றன' - (நாலடி. 12) 'நலத்தின்கண் நாரின்மை' - (குறள் 958)
நார் - கயிறு அன்புப் பிணைப்பை உணர்த்திற்று.  ஒருவன் செய்த நன்றியை
மறந்தவனைக் கொன்றாலும் பழிபாவமில்லை; ஆதலால், அச்சுக்கிரீவனது
உண்மையான மனத்தை அறிந்து வருமாறு இலக்குவனிடம் இராமன் கூறினான்
என்பது.                                                        3