சுக்கிரீவனது நிலை 4286. | நளன் இயற்றிய நாயகக் கோயிலுள், தள மலர்த் தகைப் பள்ளியில், தாழ் குரல் இள முலைச்சியர் ஏந்து அடி தைவர, விளை துயிற்கு விருந்து விரும்புவான். |
நளன் இயற்றிய - வானர வீரனாகிய நளனால் உருவாக்கப் பட்ட; நாயகக் கோயிலுள் - சிறந்த அரண்மனைக்குள்ளே; தளமலர் தகைப்பள்ளியில் - இதழ் நிறைந்த மலர்களைப்பரப்பி அமைக்கப்பட்ட அழகிய படுக்கையில்; தாழ்குழல் இள முலைச்சியர் - நீண்ட கூந்தலை யும் இளமையான முலைகளையும் உடைய மகளிர்; ஏந்து அடி தைவர - சிறந்த (தன்) கால்களை வருடிப்பிடிக்க; விளை துயிற்கு - உண்டாகும் தூக்கத்திற்கு; விருந்து விரும்புவான் - (தான்) விருந்தாவதை விரும்புவனும். புதிதாக ஆட்சியைப் பெற்று அந்தப்புரத்திலே மகளிர் பலர் தன் அடி களை வருட இனிய தூக்கத்தை மேற்கொண்டுள்ளான் சுக்கிரீவன் என்பது. நளன் - தேவ சிற்பியான விசுவகர்மாவின் மகன். ஏந்து அடி - மடியில் வைத்துக் கொண்டுள்ள பாதங்கள் என்றும் உரைக்கலாம். தூங்குவதற்குத் தைவரல் முதலியன துணையாய் இன்பம் பயப்பன. ஆதலால், அவற்றைத் துயிலுக்கு விருந்தென்றார். இதுமுதல் ஐந்து பாடல்கள் குளகச் செய்யுள்கள். விரும்புவான், விளங்குவான், வைகுவான், மயங்கினான், தயங்குவான் (4286 - 4290) என்ற சொற்கள் கிடந்தனன் (4291) என்ற வினைமுற்றைக் கொண்டு முடியும். 18 |