4287.தெள்ளியோர் உதவ, பெருஞ்
      செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம்
     களித்தான்; கதிர்ப்
புள்ளி மா நெடும் பொன்
      வரை புக்கது ஓர்
வெள்ளி மால் வரை
      என்ன விளங்குவான்.*

     தெள்ளியோர் உதவ - தெளிந்த அறிவுடையவரான இராமலக்கு வரால்
வழங்கப்பெற்ற; பெருஞ்செல்வமாம் - பெரிய அரசாட்சிச் செல்வமாகிய;
கள்ளினால் அதிகம் களித்தான் -
கள்ளைக் குடித்ததனால் மிகுதியாகக்
களிப்பில் மிதந்தவனாய்; கதிர்ப்புள்ளி - ஒளிக்கற்றைகளின்
சேர்க்கையையுடைய; மாநெடும் பொன் வரை - மிகப்பெரிய பொன்னிற
மாலையில்; புக்கது - புகுந்து தங்கக் கூடிய; ஓர் வெள்ளி மால் வரை
என்ன -
ஒரு பொய வெள்ளி மலை போல; விளங்குவான் -
விளங்குபவனும்.

     களிப்பை உண்டாக்குதல் பற்றிப் பெருஞ்செல்வதைக் 'கள்' என்றார்.
சுக்கிரீவன், ஆட்சிச் செல்வத்தைத் தானாகப் பெறவில்லை.  இராமலக்குவரின்
உதவியால் பெற்றான்.  இதனைத் 'தெள்ளியோர் உதவ' என்றதனால்
விளக்கினார்.  'செல்வமாம் கள்' - செல்வத்தால் ஆகும் மயக்கம்.

     வெண்ணிறமுள்ள சுக்கிரீவனுக்கு வெள்ளி மலையையும், பொன்னிறக்
கட்டிலுக்கு (அரண்மனை)ப்பொன்மலையையும் உவமையாக்கினார்.  'பொன்
வரை புக்கதோர் வெள்ளி மால் வரையென்ன விளங்குவான்' - இல்பொருள்
உவமை.                                                     19