4290. | மகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து உகு நெடுஞ் சுடர்க் கற்றை உலாவலால், பகலவன் சுடர் பாய் பனி மால் வரை தக மலர்ந்து, பொலிந்து தயங்குவான். |
மகுட குண்டலம் ஏய் - மகுடமும் குண்டலங்களும் பொருந்திய; முக முண்டலத்து - முகமண்டலத்திலிருந்து; உகும் நெடுஞ்சுடர்க் கற்றை - வீசும் மிகுதியான ஒளியின் தொகுதி; உலாவலால் - (வெண்மை யான உடம்பு முழுவதும்) பரவுவதால்; பகலவன் சுடர்பாய் - சூரியனது கதிர்கள் பரவிய; மால்பனி வரை தக - மிக்க பனி படர்ந்த இமய மலையைப்போல; மலர்ந்து பொலிந்து - மலர்ச்சியுற்றுப் பொலிவோடு; தயங்குவான் - விளங்குபவனுமாய். சூரியனது கதிர்கள் பரவுகின்ற இமயமலையைப் போன்று சுக்கிரீவன் விளங்கினான் என்பது உவமையணி. 22 |