அங்கதன் அனுமனிடம் செல்லுதல்

4294. ஆதலால், அவ் அரசு இளங்
      கோள் அரி, -
யாதும் முன் நின்று
     இயற்றுவது இன்மையால்,
கோது இல் சிந்தை
      அனுமனைக் கூவுவான்
போதல் மேயினன் -
      போதகமே அனான்.

     ஆதலால் - அரசாட்சிச் செருக்காலும், கள்ளின் மயக்கத்தாலும் தன்னை
மறந்து சுக்கிரீவன் படுக்கையை விட்டு எழாமல் கிடக்கவே; போதகமே
அனான் -
யானைக் கன்று போன்றவனும்; அவ் அரசு இளங்கோளரி -
இளமையான வலிய ஆண் சிங்கம் போன்றவனுமான அவ் அங்கதன்; முன்
நின்று இயற்றுவது -
சுக்கிரீவன் முன்னே நின்று செய்யத்தக்கது; யாதும்
இன்மையால் -
எதுவும் இல்லாததால்; கோது இல் சிந்தை அனுமனை -
குற்றமற்ற மனத்தையுடைய அனுமனை; கூவுவான் போதல் மேயினான் -
அழைப்பதற்காக (அவனிடம்) செல்ல லானான்.

     வலிமை, துணிவு, முன்னும் பின்னும் நோக்குதல் இவற்றால் சிங்கமும்,
நடை, வலிமை, பெருமிதம் ஆகியவற்றால் யானையும் அங்கதனுக்கு
உவமையாயின.                                                26