4300. | 'திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை; நிறம் பொலீர்; உங்கள் தீவினை நேர்ந்ததால், மறம் செய்வான் உறின், மாளுதிர்; மற்று இனிப் புறஞ்செய்து ஆவது என்?' என்கின்ற போதின்வாய், |
மெய் திறம்பினீர் - சத்தியம் தவறிவிட்டீர்கள்; உதவியைச் சிதைத் தீர்- (இராமன் செய்த) உதவியை மறந்தீர்கள்; நிறம் பொலீர் - குணத்தால் பொல்லாதவர்கள் ஆனீர்கள்; உங்கள் தீவினை நேர்ந்ததால் - உங்களது பாவச் செயல் பயன்தர வந்ததால்; மறம் செய்வான் உறின் - (அந்த வீரர் உம்மை எதிர்த்துப்) போர் செய்யத் தொடங்கினால்; மாளுதிர் - (அவரால்) மடிவீர்கள்; இனிப் புறம் செய்து - இனி மேற்கொண்டு என்ன செய்தும்; ஆவது என் - அதனால் விளையக் கூடிய பயன் யாது; என்கின்ற போதின் வாய் - என்று (அங்கதன் முதலோரைத் தாரை) கண்டித்துப் பேசும் சமயத்தில். . . . நிறம் பொல்லீர் (பொலீர்); நிறம் - குணம். திறம்புதல்: மாறுபடுதல். 32 |