4307. | பகரவேயும் அரிது; பரிந்து எழும் புகர் இல் வானரம் அஞ்சிய பூசலால், சிகர மால் வரை சென்று திரிந்துழி மகர வேலையை ஒத்தது, மா நகர், |
பகரவேயும் அரிது - (குரங்குகளின் அச்சத்தால் நிகழ்ந்தவற்றைச்) சொல்வதற்கும் அரியது; பரிந்து எழு - கொடிய துன்பப்பட்டு இருப்பிடத்தை விட்டு ஓடிய; புகர் இல் வானரம் - குற்றமற்ற அக் குரங்குகள்; அஞ்சிய பூசலால் - அச்சத்தால் செய்த பேரொலியால்; மா நகர் - சிறந்த அக் கிட்கிந்தை நகரமானது; சிகர மால்வரை சென்று - சிகரங்களையுடைய பெரிய (மத்தாகிய) மந்தர மலை புகுந்து; திரிந்துழி மகர வேலையை ஒத்தது - சுழன்ற பொழுது ஆரவாரித்த மீன்களைக் கொண்ட பாற்கடலைப் போன்றது. பூசல் -ஆரவாரம். 39 |