தாரை வழியினைத் தடுத்து நிற்றல் 4311. | 'நீர் எலாம், அயல் நீங்குமின்;நேர்ந்து, யான், வீரன் உள்ளம் வினவுவல்' என்றலும், பேர நின்றனர், யாவரும்;பேர்கலாத் தாரை சென்றனள், தாழ் குழலாரொடும். |
நீர் எலாம் - (அங்கதன் முதலானவர்களைப் பார்த்த) நீங்கள் எல்லோரும்; அயல் நீங்குமின் - அப்பாலே செல்லுங்கள்; யான் நேர்ந்து- நான் (இலக்குவன் எதிரே) சென்று; வீரன் உள்ளம் - வீரனான அவனது மனக் கருத்தை; வினவுதல் என்றாலும் - வினவி அறிவேன் என்று சொன்ன அளவில்; யாவரும் பேர நின்றனர் - அந்த வானரர்கள் யாவரும் விலகிச் சென்று நின்றார்கள் (உடனே); பேர் கலாத்தாரை - நெறிமுறைகளில் பின்னிடாத தாரை; தாழ் குழலாரொடும் - மலர் சூடிய கூந்தலையுடைய தோழியரோடு; சென்றனள் - புறப்பட்டுச் சென்றாள். பெண்களை எதிர்க்க மாட்டான் என்பதை 'வீரன்' என்ற சொல் உணர்த்துகின்றது. பேர, பேர்கலா - முரண் தொடை. 43 |