4337. | அனையது கருதி, பின்னர், அரிக் குலத்தவனை நோக்கி, 'நினை; ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது, நின்பால்; இனையன உணர்தற்க ஏற்ற; எண்ணிய நீதி' என்னா, வனை கழல் வயிரத் திண் தோள் மன் இளங் குமரன் சொல்வான்: |
அனையது கருதி - (இவ்வாறு) அதைப் பற்றிச் சிந்தித்து; பின்னர் - பின்பு; வனை கழல் வயிரத் திண்தோள்- வீரக் கழல் பூண்ட கால்களையும், மிக்க வலிமையான தோள்களையும் உடைய; மன் இளங்கும ரன் - இளவரசனான இலக்குவன்; அரிக்குலத்தவனை நோக்கி - வானர குலத்தைச் சேர்ந்த அனுமனைப் பார்த்து; இன்னே நின்பால் - இப்பொழுதே உன்னிடம்; ஒரு மாற்றம் நிகழ்த்துவது உளது - (நான்) ஒன்று கூற வேண்டியுள்ளது; இனையன - கூறும் இந்த வார்த்தைகள்; உணர்தற்கு ஏற்ற- (நீ) உணர்ந்து அறிவதற்குத் தகுதியுடையவை; எண் ணிய நீதி - (இவ்வார்த்தைகள்) எண்ணித் துணிந்த நீதியின்பாற் பட் டவையாகும்; என்னாசொல்வான் - என்று சொல்லத் தொடங்கினான். அனையது - சுக்கிரீவன் இராமனது ஆணையை மீறாதிருந்தம், அவனுக்குக் கிடைத்த செல்வம் சிறுமை செய்தது என்பது. செல்வம் பெற்றவர்க்குப் பல்வேறு மாறாட்டங்கள் நிகழக் கூடும்; அதனால் பல தீங்குகள் விளைய வாய்ப்புள்ளது. கழல் - தானியாகுபெயர். 69 |