'இலக்குவன் வரவை முன்னமே தெரிவியாமை ஏன்' என வினாதல்

4355.சொற்றலும், அருக்கன் தோன்றல்
      சொல்லுவான், 'மண்ணில் விண்ணில்
நிற்க உரியார்கள் யாவர்,
      அனையவர் சினத்தின் நேர்ந்தால்?
விற்கு உரியார், இத் தன்மை
     வெகுளியின் விரைவின் எய்த,
எற்கு உரையாது, நீர் ஈது
      இயற்றியது என்கொல்?' என்றான்.

     சொற்றலும் - (அவ்வாறு அங்கதன்) சொன்னவுடனே; அருக்கன்
தோன்றல் -
சூரியன் மகனான சுக்கிரீவன்; சொல்லுவான் - (பின்வருமாறு)
சொல்லத் தொடங்கினான்; அனையவர் சினத்தின் நேர்ந்தால் - 'அந்த
இராமலக்குவர் கோபம் கொண்டு எதிர்த்து வந்தால்; மண்ணில் விண்ணில் -
இந்த நிலவுலகத்திலோ வானுலகத்திலோ; நிற்க உரியார்கள் யாவர் -
அவர்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்கள்யார்?விற்கு உரியார் - வில்
வீரராகிய அந்த இலக்குவன்; இத் தன்மை வெகுளியின் - இவ்வாறு
கோபத்துடன்; விரைவின் எய்த - விரைந்து வரும்படியாக; எற்கு உரையாது
-
(அதனை) எனக்குத் தெரிவிக்காமல்; நீர் ஈது - நீங்கள் இவ்வாறு;
இயற்றியது என்கொல் -
செய்தது என்ன காரணம் பற்றி?' என்றான் -
என்று (அங்கதனை) வினவினான்.

     எவ்வுலகத்திலும் ஈடில்லாத மகாவீரர் இராமலக்குவர் என்பதை
அறியாமல் வாயில் அடைத்து இலக்குவனோடு போர் செய்ய நின்றதும், அந்த
இலக்குவன் பெருங்சினத்தோடு வந்தபோது தனக்கு முன்னமே
தெரிவியாதிருந்ததும் தவறு என்று சுக்கிரீவன் குறிப்பித்தான் என்பது.

     ஈது இயற்றியது - கதவடைத்துக் கற்கள் அடுக்கியது முதலான
செயல்களைக்குறிக்கும்.                                          87