4398.பின்னரும் விளம்புவான்,
      'பெருமையோய்! நின்று
இன் அருள் உதவிய
      செல்வம் எய்தினேன்;
மன்னவ! நின் பணி
      மறுத்து வைகி, என்
புல் நிலைக் குரங்கு
      இயல் புதுக்கினேன்' என்றான்.

     பின்னரும் - (சுக்கிரீவன் இராமனை நோக்கி) மறுபடியும்; விளம்புவான்
-
கூறுவான்; 'பெருமையோய் - பெருமைக் குணமுடைய வனே!மன்னவ -
அரசனே!நினது இன் அருள் - உனது இனிய அருளால்; உதவிய செல்வம்
எய்தினேன் -
கிடைத்தற் கரிய செல்வத்தை அடைந்தேன்; நின் பணி
மறுத்து வைகி -
(அவ்வாறு பெற்றிருந்தும்) உனது கட்டளையை மீறி நடந்து;
என் புல் நிலை -
எனது அற்பமான; குரங்கு இயல் புதுக்கினேன் -
குரங்குப் புத்தியைப் புதிதாக வெளிப் படுத்தி விட்டேன்; என்றான் - என்று
கூறினான்.

     உதவி செய்தவர் திறத்தில் செய்ந் நன்றி மறந்து பிழை செய்த தனது
இழிகுணத்தைச் சுக்கிரீவன் வெறுத்துக் கூறுகின்றான் என்பது.           130