4405. | விரும்பிய இராமனும், 'வீர! நிற்கு அது ஓர் அரும் பொருள் ஆகுமோ? அமைதி நன்று' எனா, 'பெரும் பகல் இறந்தது; பெயர்தி; நின் படை பொருந்துழி வா' என, தொழுது போயினான். |
விரும்பிய இராமனும் - (சுக்கிரீவனிடம்) அன்புடைய இராமனும்; (அவனை நோக்கி); வீர - வீரனே!நிற்கு அது - உனக்கு (ச் சேனை திரட்டி முடித்தலாகிய) அச் செயலானது; ஓர் அரும்பொருள் ஆகுமோ - அரிய காரியமாகுமோ? அமைதி நன்று - (உனது) அடக்கமான குணம் சிறந்ததாக உள்ளது; எனா - என்று சொல்லி; பெரும்பகல் இறந்தது - (இப்பொழுது) நீண்ட பகலோ கழிந்துவிட் டது; பெயர்தி - (ஆகவே இன்று புறப்பட்டுச் சென்று; நின் படை - உனது சேனை; பொருந்துழி வா - திரண்டு வந்த போது (அவற்றோடு) வருவாய்; என - என்று இராமன் விடை கொடுக்க; தொழுது போயினான் - இராமனை வணங்கி (ச் சுக்கிரீவன்) சென்றான். சுக்கிரீவன் தன் சேனை தங்கியுள்ள பாசறைக்குச் சென்றான் என்பது. பெயர்தி: முற்றெச்சம். 137 |