4425. | தீர்க்கபாதனும், வினதனும், சரபனும், - திரைக்கும் மால் கருங் கடற்கு உயர்ந்தென மைம் முகத்து அனிகம் ஆர்க்கும் எண்ண அருக் கோடி கொண்டு, அண்டமும் புறமும் போர்க்கும் பூமியில் மறைதர, - முறையினின் புகுந்தார். * |
தீர்க்க பாதனும் - தீர்க்க பாதனும்; வினதனும் சரபனும் - வினதனும் சரபனும்; திரைக்கும் மால் கருங் கடற்கு உயர்ந்து என - அலையெறிகின்ற பெரிய கரிய கடலைக் காட்டிலும் பெருந் தோற்றத்தையுடையனவான; ஆர்க்கும் எண்ண அரும் - எத் திறமுடையவர்க்கும்எண்ணிக் கணக்கிடமுடியாத; மை முகத்து அனிகம் கோடி கொண்டு - கறுத்த முகமுள்ள கோடிக் கணக்கான வானர சேனையை உடன் கொண்டு; அண்டமும் புறமும் - உலகவுருண்டையின் உள்ளும் புறமும்; போர்க்கும் பூமியின் மறைதர - மேலே எழுந்து மூடிக் கொள்ளும் புழுதியால் மறையும்படி; முறையினில் புகுந்தார் - ஒருவர்பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள். தீர்க்கபாதன்: நீண்ட காதலுடையவன். விநதன்: மிகவும் வணக்கமுடையவன். சரபன்: சரபப் பறவை (எட்டுக்கால் புள்) போன்ற வலிமை வாய்ந்தவன்; இவன் மேகக் கடவுளின் மைந்தன். மைம் முகத்து அனிகம்: கருங்குரங்குகளின் படை. 19 |