இராமன் படைகளைக் காணுதல்

4434. அனையது ஆகிய சேனை
      வந்து இறுத்தலும், அருக்கன்
தனையன், நொய்தினின் தயரதன்
      புதல்வனைச் சார்ந்தான்;
'நினையும் முன்னம் வந்து அடைந்தது,
      நின் பெருஞ் சேனை;
வினையின் கூற்றுவ, கண்டருள்,
      நீ என விளம்ப.

     அனையது ஆகிய சேனை - அப்படிப்பட்ட வானரப் படை; வந்து
இறுத்தலும் -
வந்து தங்கிய அளவில்; அருக்கன் தனயன் - சூரியன்
மகனான சுக்கிரீவன்; தயரதன் புதல்வனை நொய்தினில் சார்ந்தான் - தசரத
மன்னனின் மகனாகிய இராமனை விரைவில் சென்றடைந்து; வினையின்
கூற்றுவ -
தீவினைகளுக்கு இயமன் போன்றவனே!நினையும் முன்னம் -
நினைப்பதற்க முன்பே (வெகு விரைவில்); நின் பெருஞ் சேனை - உனது
பெரிய சேனையானது; வந்து அடைந்தது - வந்து சேர்ந்தது; கண்டருள் நீ -
நீ அதைக் காண வருவாய்; என விளம்ப - எனக் கூற. . . .

     'வினையின் கூற்றுவ' என்று இராமனை விளித்தது உயிர்களை வாட்டும்
வினைகளைப் போக்கிஅவற்றைப் பிறப்பற்றனவாகச் செய்யும் இராமனது அருள்
திறம்கருதி.                                                   28