4445. | 'தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த வரம் கொள் பேர் உலகத்தினில், மற்றை மன்னுயிர்கள், உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் குரங்கின் மாப் படைக்கு, உறையிடப் படைத்தனன்கொல்லாம்? |
தரங்க நீர் எழு - அலைகள வீசும் நீரில் முளைக்கும் இயல்புள்ள; தாமரை நான்முகன் - தாமரை மலரின் உதித்த பிரமன்; தந்த - படைத்த; வரம் கொள் - மேன்மையைப் பெற்ற; பேர் உலகத்தினில்- இப் பெரிய உலகத்திலுள்ள; மற்றை மன் உயிர்கள் - நிலை பெற்ற மற்றைய உயிரினங்களை; உயிர் படைத்து எழுந்தன - உயிர் பெற்று வந்தனவாகிய; உரம் கொள் - வலிமை கொண்ட; மால் வரை ஒக்கும் .பெரிய மலைகளைப் போன்ற; குரங்கின் மா படைக்கு - இந்தப் பெரிய வானர சேனைக்கு; உறை இட - உறையிட்டுக் கணக்கிடுவதற்காகவே; படைத்தனன் கொல் - படைத்தான் போலும். பிற உயிர்களெல்லாம் இச் சேனையிலுள்ள வானரத் தொகைக்கு உறையிடு வதற்கென்றே படைக்கப்பட்டனபோலும் என்பது. உறை: பெரிய எண்ணைக் குறிப்பிட அடையாளமாக வைக்கும் சிறு பொருள். 'அலருளோன் ஆதியாக ஒழிந்த வேறு உயிர்களெல்லாம் அரக்கருக்கு உறையும் போதா' (4868) 'உறையிடவும் போதார்' - (5344) என்ற இடங்களிலும் இக்கருத்து வந்துளது. 39 |