நடக்க வேண்டுவன குறித்துச் சிந்தனை செய்க என இராமன் கூறுதல் 4450. | எனது உரைத்த எரிகதிர் மைந்தனை, வென்றி விற் கை இராமன் விருப்பினால், 'நின்று இனிப் பல பேசி என்னோ? நெறி சென்று இழைப்பன சிந்தனை செய்க' என்றான். |
என்று உரைத்த - என்று கூறிய; எரி கதிர் மைந்தனை - வெப்ப மான கதிர்களையுடைய சூரியன் மகனான சுக்கிரீவனை; வென்றி விற்கை இராமன் - வெற்றியைத் தரும் கோதண்டம் என்னும் வில்லைத் தாங்கிய இராமன்; விருப்பினால் - அன்புடன் (நோக்கி); இனி நின்று பல பேசி என்னோ - இப்பொழுது (வீணே காலங் கழியுமாறு) பலபடப் பேசுவதால் வரும் பயன் யாது? நெறி சென்று இழைப்பன - முறையாகச் செயலாற்றும் வழியை மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைக் குறித்து; சிந்தனை செய்க - ஆலோசைை செய்க; என்றான் - என்று சொன்னான். வென்றி விற்கை இராமன்: எப்பொழுதும வெற்றியே அல்லாமல் தோல்வியையறியாத கோதண்டத்தை ஏந்தியவன். எரிகதிர் - வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. சூரியனைக் குறித்து நின்றது. 4 |