4453. | 'தென் திசைக்கண், இராவணன் சேண் நகர் என்று இசைக்கின்றது, என் அறிவு, இன்னணம்; வன் திசைக்கு, இனி, மாருதி நீ அலால், வென்று, இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ? |
இராவணன் சேண் நகர் - இராவணனுடைய நீண்ட பெரிய இலங்காபுரி; தென்திசைக்கண் - தெற்குத் திசையில் (உள்ளது); என்று - என்று; என் அறிவு இன்னணம் இசைக்கின்றது - எனது நினைவு இவ்வாறு உணர்த்துகின்றது; மாருதி - அனுமானே!இனி வன திசைக்கு - இப்போது வலிய அந்தத் திசைக்குச் (சென்று); வென்று - அங்குள்ள அரக்கரை வெற்றி கொண்டு; இசைக்கு உரியார் - புகழ் பெறத் தகுதியுள்ளவர்; நீ அலால் பிறர் வேண்டுமோ - நீ ஒருவனே யல்லாமல் வேறொருவரும் வேண்டுமோ? 'இராவணன் நகராகிய இலங்கை தென் திசையிலிருப்பதாக எனக்கு நினைவு; நீ ஒருவனே அத் தென்திசைக்குச் சென்று இராவணனது இலங்கையைக் கண்டு அங்குள்ள அரக்கரை வென்று சீதையின் செய்தியை அறிந்து வந்து சொல்லிப் புகழ் பெறுவதற்குத் தகுதியுடையாய்' என்று சுக்கிரீவன் அனுமனிடம் கூறினான். இன்னணம் - (இன்னவண்ணம்) தொகுத்தல் விகாரம். எல்லாவுயிர்களையும் கவரும் யமன் திசையானதாலும், வீரம் மிக்க இராவணன் அங்கு ஆட்சி புரிவதாலும் தென்திசை வன்திசைஎனப்பட்டது. 7 |