4465. | 'நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி; அயனம் இல்லை அருக்கனுக்கு அவ் வழி; சயன மாதர் கலவித்தலைத் தரும் பயனும், இன்பமும், நீரும், பயக்குமால். * |
(அங்குள்ளவர்கள்) நயனம் நன்கு இமையார் - கண்களை நன்றாக இமைக்கமாட்டார்கள்; நனி துயிலார் - நன்றாகத் தூங்கமாட்டார்கள்; அருக்கனுக்கு - சூரியனுக்கு; அவ் வழி அயனம் இல்லை - அவ்விடத் தில் நுழைவதற்குரிய வழி கிடையாது; சயனமாதர் கலவித் தலைதரும் பயனும் - படுக்கையில் மகளிரின் சேர்க்கையால் உண்டாகின்ற போக இன்பத்தையும்; இன்பமும் - பெருமகிழ்ச்சியையும்; நீரும் - நீர்ச் செழிப்பையும், பயக்கும் - (எப்பொழுதும்) உண்டாக்கும். ஆல்: அசை. கண்ணிமையாமையும், துயிலாமையும் தேவர்களுக்கு இயல்பு. தேவர்கள் வாழுமிடமாயுள்ளது அப்பொழில். அது சூரியனின் கதிர்களும் உட்புகாதவாறு மரங்களால் செறிந்துள்ளது. 19 |