4494. | 'அங்கையும் அடியும் கண்டால், அரவிந்தம் நினையுமாபோல் செங் களி சிதறி, நீலம் செருக்கிய தெய்வ வாட் கண் மங்கைதன் கழுத்தை நோக்கின், வளர் இளங் கழுகும், வாரிச் சங்கமும், நினைதிஆயின், அவை என்று துணிதி; தக்கோய்! |
தக்கோய் - சிறப்பு வாய்ந்தவனே!அங்கையும் அடியும் கண்டால் - (சீதையின்) அழகிய கைகளையும், பாதங்களையும் பார்த்தால்; அரவிந்தம் நினையுமா போல் - செந்தாமரைப் பூவை நினைப்பது போன்று; செங் களி சிதறி - செம்மையான செவ்வரி படர்ந்து; நீலம் செருக்கிய - நீல நிறம் நிறைந்த; தெய்வ வாள் கண் மங்கைதன் - தெய்வத் தன்மையுள்ள வாள்போன்ற கண்களையுடைய சீதையின்; கழுத்தை நோக்கின் - கழுத்தைப் பார்த்து; வளர் இளங் கமுகும் - வளருந் தன்மையுள்ள பாக்குமரத்தையும்; வாரி சங்கமும் - கடலில் பிறக்கும் சங்கையும்; நினைதி ஆயின் - (அவள் கழுத்துக்கு இணையாகும் என்று) எண்ணுவாயானால்; அவை என்று துணிதி- (அந்தக் கமுகும், சங்குமே அச்சீதையின் கழுத்திற்கு) உவமையாகும் என்றுஉறுதி செய்வாய். செந்தாமரை - கைகளுக்கும், கால்களுக்கும் உவமைகள்; கமுகும் சங்கும் கழுத்துக்கு உவமை. திரட்சியிலும், வழுவழுப்பிலும் கழுத்துக்குக் கமுகு உவமை. குவளைமலர் நிறத்திலும், வாள் வடிவத்திலும், ஒளி செய்வதிலும் கூர்மையிலும், ஆடவரை வருத்துவதிலும் கண்களுக்குஉவமை. 48 |