சுயம்பிரபையின் வினாவும் வானரர் விடையும் 4572. | அன்ன பொழுதின்கண் அவ் அணங்கும், அறிவுற்றாள்; முன், அனையர் சேறல் முறை அன்று, என முனிந்தாள்; 'துன்ன அரிய பொன் நகரியின் உறைவிர்அல்லீர்; என்ன வரவு? யாவர்? உரைசெய்க!' என இசைத்தான். |
அன்ன பொழுதின்கண் - அச் சமயத்தில்; அவ்அணங்கும் - அந்தச் சுயம்பிரபையும்; அறிவுற்றாள் - (யோக நிலையிலிருந்து நீங்கித்) தன் நினைவு வரப்பெற்றாள் (அவர்களைப் பார்த்து); அனையர் - தனக்கு எதிரில் அவர்கள்; சேறல் முறை அன்று என - வருவது தகாது என்று; முன் முனிந்தாள் - உணர்ச்சி உற்றவுடன் முதலில் கோபங்கொண்டு; துன்ன அறிய - (நீங்கள்) எவரும் அணுக முடியாத; பொன் நகரியின் உறைவிர் அல்லீர் - பொன்மயமான இந்த நகரத்தில் வாழ்வதற்கு உரியவராக இல்லை; வரவு என்ன - (நீங்கள்) இங்கு வரக் காரணம் என்ன; யாவர் - (நீங்கள்) யாவர்? உரை செய்க என - சொல்லுங்கள் என்று; இசைத்தாள் - கேட்டாள். தவம் செய்யும் பெண்ணாகிய தன்னெதிரில் ஆடவர் பலர் வந்ததால் சுயம்பிரபை கோபித்தாள் என்பது. அறிவுற்றாள்: தன் உணர்வு வரப்பெற்றாள். 52 |