அனுமன் பேருருவம் கொண்டு, பிலத்தைப் பிளந்து, ஒங்கி நிற்றல் 4588. | 'நடுங்கன்மின்' எனும் சொலை நவின்று, நகை நாற மடங்கலின் எழுந்து, மழை ஏற அரிய வானத்து பெருங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற, வெருங் கைகள் சுமந்து, நெடு வான் உற நிமிர்ந்தான். |
நடுங்கன்மின் எனும் - (அனுமன் மற்றவரை நோக்கி) அஞ்சாதீர் கள் என்ற; சொலை நவின்று - அபயமொழியைக் கூறி; நகை நாற - புன்சிரிப்புத் தோன்ற; மடங்கலின் எழுந்து - ஆண்சிங்கம் போலக் கிளம்பி; மழை ஏற அரிய - மேகங்களும் ஏறிச் செல்லமுடியாத; வானத்து உலகொடு - (அப்பாலுள்ள) வானுலகத்தோடு; ஒடுங்கல் இல் பிலம் - குறுகல் இல்லாத (அகன்ற) குகையானது; தலை திறந்து ஒன்ற - தலையிடம் திறந்து ஒன்றாகிவிட; நெடுங் கைகள் சுமந்து - (தன்னுடைய)நீண்ட கைகளையுயர்த்திக் கொண்டு; நெடு வான் உற - (தனது) பெரிய உருவம் விரிந்த ஆகாய முழுவதும் நிறையும்படி; நிமிர்ந்தான் - மேலோங்கினான். அனுமன் மற்றவர்க்கு அபயமளித்துச் சிரித்தவாறு ஆண்சிங்கம் போலக் கிளம்பிப் பிலம் முதல் ஆகாயம்வரை ஒரேவழியாகத் திறக்குமாறு தன் கைகளைத் தூக்கிக் கொண்டு பேருருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பது. நாறுதல்: தோன்றுதல். ஆண்சிங்கம் போன்று பேருருக்கொண்டு எழுந்ததிலிருந்து இவன் அரிய செயல்களையும் எளிதாய இயற்ற வல்லவன் என்ற அவனது பெருமை கூறப்பெற்றது. மடங்கல்: பிடரிமயிர் மடங்கப் பெற்றிருப்பது என்று சிங்கத்திற்குக்காரணக்குறி. 68 |