4630.ஆய குன்றினை எய்தி, அருந்தவம்
மேய செல்வரை மேயினர், மெய்ந் நெறி
நாயகன்தனை நாளும் வணங்கிய
தூய நல் தவர் பாதங்கள் சூடினார்.

     ஆய குன்றினை - (வானரவீரர்) அத்தகைய தூய்மையும் சிறப்பும்
அமைந்த திருவேங்கடமலையை; எய்தி - அடைந்து; அருந்தவம் மேய
செல்வரை -
அரிய தவத்தைப்பொருந்திய தவயோகிகளை; மேவினர் -
அடைந்து; மெய்ந்நெறி நாயகன்தனை - என்றும் அழியாத
மோட்சநிலைக்குத் தலைவனான திருவேங்கடநாதனை; நாளும் வணங்கிய -
தினமும் வணங்கி வழிபாடு செய்த; தூய நல்தவர் - தூய்மையான சிறந்த
தவத்தையுடைய அப் பெரியவர்களின்; பாதங்கள் சூடினார் - திருவடிகளைத்
தம் தலைமேல் சூடி வணங்கினார்கள்.

     திருவேங்கட நாதனை வணங்குகின்ற பெரும்பேறு பெற்றுள்ளவராதலால்
அவர்களை 'அருந்தவமேய செல்வர்', 'தூய நல் தவர்' என்றுகூறினார்.   37