4691.'பைந் தார் எங்கள் இராமன் பத்தினி,
செந் தாள் வஞ்சி, திறத்து இறந்தவன்,
மைந்தா! எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு
உய்ந்தான் அல்லது, உலந்தது உண்மையோ?

     மைந்தா - வீரமுள்ளவனே!பைந்தார் எங்கள் இராமன் - பசுமையான
மலர்மாலயணிந்தவனான எங்கள் இராமனின்; பத்தினி - மனைவியும்;
செந்தாள் வஞ்சி திறத்து -
சிவந்த அடிகளையுடைய வஞ்சிக் கொடி
போன்றவளுமான சீதையின் பொருட்டு; இறந்தவன் - உயிர் நீத்தவனாகிய;
எம்பி -
என் தம்பி சடாயு; வரம்பு இல் சீர்த்தியோடு - அளவில்லாத
புகழோடு; உய்ந்தான் அல்லது - நல்வாழ்வு பெற்றான் என்று
கூறாலாமேயல்லாமல்; உலந்தது - இறந்து போனான் என்பது; உண்மையோ-
உண்மைப் பொருளாகுமோ?

     சீதையை மீட்பதற்குத் தன்னுயிரைக் கொடுத்தவனாதலால் அவனது
பூதவுடம்பு அழிந்தும் புகழுடம்பு அழியாது நிலை நிற்கின்றது.  ஆதலால்,
அவன் இறந்தும் இறவாதவனாகவே வாழ்ந்துவருகிறான் என்பது. பசுமை:
புதுமை.

     செந்தாள் வஞ்சி: பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை; அடையடுத்த உவமையாகு பெயருமாம்.

     'தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு' - (5305)                    44