526.

என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இரு கை
                                    கூப்பி,
'புன் தொழில்குரங்கு எனாது என் தோளிடைப்
                              புகுது' என்னா,
தன் தலை படியில்தாழ்ந்தான்; அண்ணலும், சரணம்
                             வைத்தான்;
வன் திறல் வாலிசேயும் இளவலை வணங்கிச்
                             சொன்னான்;

     இராமன் அனுமன் மேல்வீற்றிருத்தல்.                  (49-2)